கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

கொரோனா பரிசோதனை - சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு

கொரோனா பரிசோதனைகளில் தளர்வுகள் குறித்த புதிய வழிகாட்டுதல்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில் கொரோனா பரிசோதனைகளில் தளர்வுகள் குறித்த புதிய வழிகாட்டுதல்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி அறிகுறிகள் இருந்தால் மட்டுமே இனி கொரோனா பரிசோதனைகள் செய்யப்படும் என்றும் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழக்கமாக மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனைகள் இனி தேவை இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் அறுவை சிகிச்சை நோயாளிகள் ஆகியோருக்கு அறிகுறிகள் இல்லாத நிலையில் கொரோனா பரிசோதனை தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வரும் பயணிகளில் 2% பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யும் முறையும் ரத்து செய்யப்படுவதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு