கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

தமிழகத்தில் 2-வது நாளில் 3 ஆயிரத்து 30 பேருக்கு கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்த தொடங்கிய 2-வது நாளில் 3 ஆயிரத்து 30 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

தினத்தந்தி

சென்னை,

இந்தியா முழுவதும் நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது. தமிழகத்தில் நேற்று முன்தினம் 160 மையங்களில் கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 6 மையங்களில் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பு மருந்துகளும் செலுத்தப்பட்டது. அந்த வகையில் முதல் நாளான நேற்று முன்தினம் மட்டும் 3 ஆயிரத்து 27 பேர் கோவிஷீல்டு தடுப்பு மருந்து செலுத்திக்கொண்டனர். மேலும் 99 பேர் கோவேக்சின் தடுப்பு மருந்து செலுத்திக்கொண்டனர்.

இதன்படி முதல் நாளில் மட்டும் தமிழகத்தில் 3 ஆயிரத்து 136 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. 2-வது நாளாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

தமிழகத்தில் நேற்று 158 மையங்களில் கோவிஷீல்டு தடுப்பு மருந்தும், 6 மையங்களில் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பு மருந்துகளும் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாலை 6 மணி நிலவரப்படி தமிழகத்தில் நேற்று 2 ஆயிரத்து 847 பேருக்கு கோவிஷீல்டு மருந்துகளும், 183 பேருக்கு கோவேக்சின் மருந்துகளும் என மொத்தம் 3 ஆயிரத்து 30 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 5 ஆயிரத்து 874 பேருக்கு கோவிஷீல்டு மருந்துகளும், 282 பேருக்கு கோவேக்சின் மருந்துகளும் என மொத்தம் 6 ஆயிரத்து 156 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்