தமிழக செய்திகள்

செழித்து வளர்ந்துள்ள பருத்தி செடிகள்

பருத்தி செடிகள் செழித்து வளர்ந்துள்ளன.

தினத்தந்தி

கரூர் மாவட்டத்தில் சில இடங்களில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்து வருகின்றனர். இந்த பருத்தி சாகுபடி செய்ய பிப்ரவரி, மார்ச் மாதங்கள் ஏற்றதாகும். எம்.சி.யூ-5 (விடி), எஸ்.வி.பி.ஆர்-2, 4, சுரபி ஆகிய ரகங்கள் ஏற்றவை. பஞ்சு நீக்காத விதையை ஏக்கருக்கு 6 கிலோ, பஞ்சு நீக்கிய விதையை ஏக்கருக்கு 3 கிலோ பயன்படுத்தலாம். பஞ்சு நீக்காத விதைகளை அமில விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். அவ்வாறு விதைக்கப்பட்ட பருத்தி செடிகள் தற்போது நன்றாக வளர்ந்து அதிக மகசூல் தரும் தருவாயில் உள்ளன. அதன்படி கரூர் அருகே உள்ள சணப்பிரட்டியில் பயிரிடப்பட்டுள்ள பருத்தி செடிகள் நன்கு வளர்ந்து பசுமையாக காட்சி அளிக்கிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தற்போது பருத்தி செடிகள் நன்று வளர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட அதிக மகசூலை தந்து அதிக லாபத்தை தரும் என எதிர்பார்க்கிறோம் என்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு