தமிழக செய்திகள்

உள்ளூர் சந்தையில் பஞ்சு விலை உயர வாய்ப்பு

உள்ளூர் சந்தையில் பஞ்சு விலை உயர வாய்ப்பு உள்ளது.

தினத்தந்தி

பருத்தி சாகுபடி வெகுவாக குறைந்துள்ள நிலையில் பஞ்சு விலை ஒரு கண்டி தற்போது ரூ. 60 ஆயிரம் முதல் ரூ.62 ஆயிரம் வரை இருக்கும் நிலையில் அடுத்து வரும் நாட்களில் இதன் விலை ரூ.70ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரை உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பஞ்சு ஏற்றுமதி கடந்த ஆண்டு 42 லட்சம் பேலாக இருந்த நிலையில் தற்போது 30 லட்சம் பேலாக குறைந்துவிட்டது. அடுத்து இதேநிலை நீடித்தால் ஏற்றுமதி 25 லட்சம் பேலாக குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு வெளிநாடுகளில் பஞ்சு தேவை குறைவாக உள்ளது காரணம் என கூறப்படுகிறது. உள்ளூர் நூற்பு ஆலைகள் முழுமையாக இயங்கும் நிலையில் பஞ்சு தேவை அதிகம் இருந்தாலும் விவசாயிகள் தற்போது தங்களது பஞ்சு இருப்பை விற்பனை செய்யாத நிலையில் வரும் மாதங்களில் அதனை வெளிச்சந்தையில் விற்பனை செய்ய வாய்ப்புள்ளதால் தேவைக்கேற்ப பஞ்சு கிடைத்தாலும் விலை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு