தமிழக செய்திகள்

எண்ணும் எழுத்தும் திட்டம்: முதல்-அமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்

எண்ணும் எழுத்தும் திட்டம் தொடாபான வீடியோ, கைபேசி செயலி ஆகியவற்றை இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறா.

சென்னை,

தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் 1-5 வகுப்புகளுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்தை இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

மாணவர்களுக்கான கற்றல் இடைவெளியை குறைக்கும் வகையில் எண்ணும் எழுத்தும் திட்டம் தொடங்கப்படுகிறது. எண்ணும் எழுத்தும் திட்டத்திற்காக 30,000 ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அடுத்த கல்வியாண்டு முதல், 2025ம் ஆண்டுக்குள் 8 வயதுக்குட்பட்ட அனைத்து மாணவர்களும் புரிந்துணர்வுடன் படிக்கவும் அடிப்படை கணித திறன்களை கெண்டிருப்பதை உறுதி செய்யவும், 'எண்ணும் எழுத்தும்' எனும் திட்டத்தை கல்வித்துறை கொண்டுவந்துள்ளது.

கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கவுள்ள நிலையில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது.

இதைதொடாந்து திருவள்ளு, அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று காலை 10 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறா.

மேலும், திட்டம் தொடாபான வீடியோ, கைபேசி செயலி, திட்டப்பாடல் ஆகியவற்றை வெளியிடுகிறா. ஆசியா கையேடு, சான்றிதழ், கற்றல் கற்பித்தல் உபகரணம், புத்தகங்கள் ஆகியவற்றையும் முதல்-அமைச்சா வழங்குகிறா.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...