கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

கலாஷேத்ரா மாணவிகள் புகார் அளிக்க இணையதளம் உருவாக்கம்

பாலியல் புகார் பற்றி கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் புகார் அளிக்க சிறப்பு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

சென்னை,

பாலியல் புகார் பற்றி கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் புகார் அளிக்க சிறப்பு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. https://reachoutsupport.co.in/ என்ற இணையதளத்தில் மாணவிகள் புகாரளிக்கலாம் என்று கலாஷேத்ரா நிர்வாகம் அமைத்த 3 பேர் கொண்ட விசாரணைக்குழுவின் தலைவர் நீதிபதி கண்ணன் அறிவித்துள்ளார்.

மாணவிகள் அளிக்கும் புகார்கள் தொடர்பான தகவல்கள் யாரிடமும் பகிரப்படாமல் ரகசியம் காக்கப்படும் என்றும் புகார் அளிப்பவர்கள் விவரங்கள் கலாஷேத்ரா நிர்வாகத்துடன் பகிர்ந்து கொள்ளப்படாது என்றும் நீதிபதி கண்ணன் தெரிவித்துள்ளார். மேலும் புகாரை சென்னை தி.நகரில் உள்ள தனது இல்லத்திலும் நேரில் அளிக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு