தமிழக செய்திகள்

விவசாயிகளுக்கு பயிர் கடன்

கீழையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

தினத்தந்தி

வேளாங்கண்ணி:

நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றிய பகுதியில் குறுவை சாகுபடி முடிந்து அறுவடைக்கு தயாராக இருக்கும் நிலையில் சம்பா சாகுபடி காண பணிகள் தீவிரமடைந்து வருகிறது.அதற்காக கீழையூரில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் மூலம் சம்பா சாகுபடிக்கு பயிர் கடன் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித்தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். இதில் விவசாயிகள் 130 பேருக்கு ரூ.51 லட்சத்து 39 ஆயிரத்து 588-க்கான காசோலையை தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் வழங்கினர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை