தமிழக செய்திகள்

வாரச்சந்தையில் அலைமோதிய பொதுமக்கள்

அரியலூர் வாரச்சந்தையில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

தினத்தந்தி

அரியலூர் நகரில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இந்த வாரச்சந்தையில் பல்வேறு ஊர்களில் இருந்து வரும் வியாபாரிகள் சாலையோரத்திலும், உழவர் சந்தையிலும் கடைகள் அமைத்து வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பொருட்களை வாங்குவதற்காக அரியலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பலர் அரியலூருக்கு வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற வாரசந்தையில் பொதுமக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. உழவர் சந்தையில் அமைக்கப்பட்டிருந்த காய்கறி கடைகள், மளிகைக்கடைகள், பழக்கடைகள் உள்பட பலதரப்பட்ட கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் சாலைகளில் இருசக்கர வாகனங்கள் அணிவகுத்து சென்றதையும், சாலையோரம் சாரைசாரையாக நிறுத்தப்பட்டிருந்ததையும் காண முடிந்தது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து