தமிழக செய்திகள்

பெண் குழந்தைகள் மீதான கொடூரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் - மு.க.ஸ்டாலின் ‘டுவிட்டர்’ பதிவு

பெண் குழந்தைகள் மீதான கொடூரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் கூறியிருப்பதாவது:-

தினத்தந்தி

சென்னை,

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமியின் உடல், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிலையில் ரத்த காயங்களுடன் வறண்ட குளம் ஒன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது. ஜூன் 29-ந்தேதி மாலையில் விளையாடச் சென்ற சிறுமி இரவு நேரமாகியும் வீடு திரும்பவில்லை என்பதால் அவரது பெற்றோரும், அக்கம்பக்கத்தினரும் தேடி அலைந்து ஜூலை 2-ந்தேதி காலையில் உயிரற்ற உடலை கண்டெடுத்துள்ளார்கள். ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

சில வாரங்களுக்கு முன்புதான் இதே புதுக்கோட்டை மாவட்டத்தில் மற்றொரு சிறுமி படுகொலைக்கு உள்ளானது தாமதமாக வெளியே தெரியவந்தது. இப்போது மீண்டும் ஒரு சிறுமி. இத்தகைய சம்பவங்கள் தமிழகத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு குறித்த கேள்விகளையும், அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. பெண்கள், சிறுமிகள், பொதுமக்களின் பாதுகாப்பு மீது அக்கறை காட்டவேண்டும் இத்தகைய கொடூரங்களுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்