தமிழக செய்திகள்

புதுக்கோட்டையில் சைக்கிள் போட்டி

புதுக்கோட்டையில் சைக்கிள் போட்டியில் வீராகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

தினத்தந்தி

புதுக்கோட்டையில் அண்ணா சைக்கிள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் 350-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் ஆர்முடன் கலந்து கொண்டனர். போட்டிகள் மாவட்ட விளையாட்டரங்க வளாகம் தொடங்கி ரெயில் நிலையம் ரவுண்டானா- மாலையீடு- சிவபுரம்-நமணசமுத்திரம் வரை சென்று மீண்டும் மாவட்ட விளையாட்டரங்கம் வரை மூன்று பிரிவுகளில் நடைபெற்றது. போட்டிகள் 13, 15, 17 வயதிற்குட்பட்ட பிரிவுகளில் ஆண், பெண்களுக்கு தனித்தனியாக நடந்தது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. பரிசளிப்பு நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் செந்தில்குமார் செய்திருந்தார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்