தமிழக செய்திகள்

36 மணி நேரங்களில் முடிந்த புயல் மீட்புப் பணிகள் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்போது நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை எழும்பூரில் உள்ள டான் போஸ்கோ தனியார் பள்ளியின் 10-ம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனா காலத்தில் டான் போஸ்கோ பள்ளிகள்தான் சிகிச்சை மையங்களாக மாறியதாகவும், அதற்கு எப்போதும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

மேலும் சென்னையில் மிக்ஜம் புயல் மற்றும் வெள்ள மீட்புப் பணிகள் மொத்தமாக 36 மணி நேரங்களில் முடிந்து விட்டதாக குறிப்பிட்ட அவர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்போது நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு