தமிழக செய்திகள்

வடசென்னை அனல் மின் நிலைய 2-வது நிலையின் 2வது அலகில் மின் உற்பத்தி பாதிப்பு.!

தொழில்நுட்ப கோளாறு காரணமாக 2வது அலகில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

பொன்னேரி,

மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு வடசென்னை அனல்மின் நிலையத்தில் உள்ள இரு நிலைகளில் மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அனல் மின் நிலைய 2வது நிலையின் 2வது அலகில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக 2வது அலகில் மட்டும் 600 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.  

SCROLL FOR NEXT