தமிழக செய்திகள்

நெற்பயிர்களை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள்

நெல்பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியது.

உசிலம்பட்டி, 

உசிலம்பட்டி மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளை ஒட்டிய பகுதியாக உள்ளது. இங்கு விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இந்த பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் மானாவாரி பயிர்களையே பயிரிட்டு வருகின்றனர். இவ்வாறு பயிரிடப்படும் நேரங்களில் காட்டுப்பன்றிகள் வயல்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது அவ்வப்போது நிகழ்ந்த வருகிறது. இந்நிலையில் உசிலம்பட்டி அருகே குப்பணம்பட்டி கிராமத்தை சேர்ந்த தவமணி என்பவரது வயலில் பயிரிட்டிருந்த நெற்பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியது. இதே போல் ஆரியபட்டி கண்மாய் ஓரத்தில் உள்ள சுமார் 25 முதல் 30 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்களையும் காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியுள்ளது. மேலும், நல்லிவீரன்பட்டியை சேர்ந்த தனசேகரன் என்பவரது தோட்டத்தில் 4 ஏக்கர் கடலை பயிர்களையும், பிச்சையம்மாள் என்பவரது தோட்டத்தில் பருத்தி செடிகளையும் காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியுள்ளன. இதனால் அப்பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். 

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு