தமிழக செய்திகள்

சேதமடைந்த பயணிகள் நிழலகத்தை சீரமைக்க வேண்டும்

கூத்தாநல்லூர் அருகே சேதமடைந்த பயணிகள் நிழலகத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினத்தந்தி

பயணிகள் நிழலகம்

கூத்தாநல்லூர் அருகே லெட்சுமாங்குடி சாலையில் உள்ளது வ.உ.சி நகர். இங்கு அப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக சாலையோரத்தில் பயணிகள் நிழலகம் கட்டப்பட்டது. இந்த பயணிகள் நிழலகம் அமைந்துள்ள சாலை திருவாரூர், மன்னார்குடி, கும்பகோணம், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால் போன்ற நகர பகுதிகளை இணைக்கும் வழித்தடம் என்பதால், இந்த பயணிகள் நிழலகத்தில் பள்ளி,கல்லூரி மாணவ-மாணவிகள், உள்ளூர் வெளியூர் பயணிகள் மற்றும் பொது மக்கள் காத்திருந்து பஸ்களில் ஏறி செல்கின்றனர்.

இடிந்து விழும் நிலையில்...

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இந்த பயணிகள் நிழலகம் சேதமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக, மேற்கூரை சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது.

இதனால் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் பயணிகள் நிழலகம் உள்ளதால் இதை பொதுமக்கள் பயன்படுத்த அச்சப்படுகின்றனர்.

சீரமைக்க வேண்டும்

இதன் காரணமாக பயணிகள் மழை, வெயிலில் சாலையோரங்களில் காத்திருந்து பஸ்களில் ஏறி செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த பயணிகள் நிழலகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்