தமிழக செய்திகள்

சூரியனில் தோன்றி வரும் கரும்புள்ளிகளால் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு - விஞ்ஞானிகள் தகவல்

சூரியனில் தோன்றி வரும் கரும்புள்ளிகளால் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானியல் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கொடைக்கானல்,

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் வானியல் ஆராய்ச்சி மையம் உள்ளது. இங்கு சூரியனின் நிகழ்வுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சூரிய காந்த புயல் இந்த ஆண்டு அதிக அளவில் வீச வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் விண்வெளி செயற்கைகோள்கள் மற்றும் செல்போன் அலைவரிசை பாதிக்கலாம் என நாசா விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து வானியல் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் கூறுகையில்,

சூரியனை நான்கு தொலை நோக்கிகள் உதவியுடன், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளோம். மேலும் 11 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனில் கரும்புள்ளிகள் தோன்றும். கடந்த சில நாட்களாக இந்த கரும்புள்ளிகள் அதிக அளவில் தோன்றி வருகிறது.

இதனால் இனி வரும் நாட்களில் அதன் வீரியம் அதிகரித்து, சூரிய காந்த புயலாக மாறி பூமிக்கு வீசும். இதன் காரணமாக பூமியில் வெப்பநிலை வழக்கத்தை விட அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இந்த மாற்றத்தால் இனி வரும் நாட்களில் சூரியனை தொடர்ந்து கண்காணித்து அதன் தாக்கத்தை பதிவு செய்ய இருக்கிறோம். அதன் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு