தமிழக செய்திகள்

காயங்களுடன் தொழிலாளிபிணம்

தாரமங்கலம் அருகே காயங்களுடன் கிடந்த தொழிலாளி உடலை போலீசுக்கு தெரியாமல் உறவினர் எரித்ததால் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி

தாரமங்கலம்

தாரமங்கலம் அருகே செவந்தானூர் பகுதியை சேர்ந்தவர் வடிவேலு (வயது 45). கல் உடைக்கும் தொழிலாளியான இவருடைய மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் இறந்து விட்டார். மகளுக்கு திருமணம் ஆன நிலையில் மகன்களுடன் வசித்து வந்தார். நேற்று மாலையில் தலையில் ரத்த காயங்களுடன் வடிவேலு இறந்து கிடந்தார். அவரது உடலை உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் அங்குள்ள மயானத்தில் எரித்து விட்டதாக தெரிகிறது. இதனை அறிந்த ஒமலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா, தாரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வடிவேலு மகன்கள் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்