தமிழக செய்திகள்

கிருஷ்ணகிரியில்அடையாளம் தெரியாத வாலிபர் பிணம்போலீசார் விசாரணை

தினத்தந்தி

கிருஷ்ணகிரி லைன்கொல்லை பகுதியில் உள்ள சாலையோரத்தில் 25 முதல் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக கொத்தபேட்டா கிராம நிர்வாக அலுவலர் முகமது சுப்ரானுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அப்போது அவர் விஷம் குடித்த நிலையில் இறந்து கிடந்தார்.

இதையடுத்து போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்