தமிழக செய்திகள்

காவேரிப்பட்டணம் அருகேடிப்பர் லாரி மோதி முதியவர் பலி

காவேரிப்பட்டினம்:

கிருஷ்ணகிரி அருகே உள்ள மூங்கில்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சாம்ராஜ் (வயது 54). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் தர்மபுரியில் இருந்து கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது சப்பானிப்பட்டி அருகே எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதியது. இந்த விபத்தில் சாம்ராஜ் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சாம்ராஜ் இறந்தார். இந்த விபத்து குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...