தமிழக செய்திகள்

கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி சாவு

ஆம்பூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி சாவு

தினத்தந்தி

ஆம்பூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ரபீக் நகரை சேர்ந்தவர் அஸ்கார் (வயது 46), தொழிலாளி.

இவர், கிணற்றில் தவறி விழுந்தார். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் ஆம்பூர் டவுன் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து சுமார் 3 மணி நேரம் தேடியும் அஸ்காரை மீட்க முடியவில்லை. இரவு நேரமானதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து நேற்று காலையில் மீண்டும் தேடினர். 2 மணி நேர தேடுதலுக்கு பிறகு அஸ்காரை பிணமாக மீட்டனர்.

இதனையடுத்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்