தமிழக செய்திகள்

கடன் பிரச்சினை: எலி மருந்தை தின்று போலீஸ் ஏட்டு தற்கொலை

கடன் பிரச்சினை காரணமாக எலி மருந்தை தின்று போலீஸ் ஏட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

திருவையாறு,

தஞ்சை அருகே உள்ள திருவையாறை அடுத்த வெள்ளாம்பெரம்பூரை சேர்ந்தவர் புகழேந்தி(வயது 43). இவருக்கு திருமணமாகி பிரம்மவித்யா (37) என்ற மனைவியும், புஷ்பசாந்தா(14) என்ற மகளும், சாந்தகுமார்(12) என்ற மகனும் உள்ளனர். புகழேந்தி, மருவூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். இவர் கடன் பிரச்சினை காரணமாக மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த அவர், சம்பவத்தன்று வீட்டில் எலி மருந்தை தின்று மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடன் பிரச்சினையில் போலீஸ் ஏட்டு எலி மருந்து தின்று தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து