தமிழக செய்திகள்

அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னைக்கு தென் கிழக்கில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதி மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.

இந்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலைக்கொண்டு இருக்கிறது. அந்த தாழ்வு மண்டலம் இன்று (வெள்ளிக்கிழமை) தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், பின்னர் அது இலங்கை மற்றும் தமிழக கடற்கரையை நோக்கி நாளை (சனிக்கிழமை) நகரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

இந்த நிலையில், சென்னைக்கு தென் கிழக்கில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 48 மணி நேரத்தில் வட தமிழக கடற்கரை பகுதியை நோக்கி நகரும் என்றும் இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு சில பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்