தமிழக செய்திகள்

ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை அரசு கையகப்படுத்தியதை எதிர்த்து தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை அரசு கையகப்படுத்தியதை எதிர்த்து தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை,

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டதை எதிர்த்து ஜெ.தீபா மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மேலும் கீழமை நீதிமன்றத்தில் அரசு செலுத்தியுள்ள தொகையில் வருமானவரி நிலுவை தொகை ரூ. 36 கோடியை வசூலிக்கவும் தடைகோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

வேதா இல்லத்தின் அசையும் சொத்துக்களை பறிமுதல் செய்ய அரசுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT