தமிழக செய்திகள்

கார்த்திகை தீபத்திருவிழா

திருச்செங்கோட்டில் கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற்றது.

தினத்தந்தி

எலச்சிபாளையம்

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில் இறைவன் ஜோதி வடிவில் பக்தர்களுக்கு காட்சி தரும் நிகழ்வை தீபத் திருவிழாவாக கொண்டாடுகின்றனர். இதையடுத்து கார்த்திகை மாத தீபத் திருவிழாவையொட்டி அர்த்தநாரீஸ்வரர், ஆதிகேசவ பெருமாள் உடன் வந்து கேவிலின் பிராதன கேபுரத்தின் அருகில் நெய்தீபம் ஏற்றி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து உச்சி பிள்ளையார் கேவிலில் திருக் கார்த்திகை தீபவிழா அறக்கட்டளை சார்பில் கூம்பு கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது பக்தர்கள் அரோகரா என கோஷமிட்டனர். தொடர்ந்து சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது. தெடர்ந்து கேவிலின் மேற்கு வாயில் அருகில் பெருமாள் செக்கப்பனை கெளுத்தும் நிகழ்ச்சி நடந்தது. தீபத் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல கார்த்திகை தீபத் திருவிழா கமிட்டி சார்பில் உச்சிப்பிள்ளையார் கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து