தமிழக செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினத்தந்தி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தீபாவளி பண்டிகை

தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (திங்கட்கிழமை) உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக ஈரோடு மாநகர் பகுதிக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதன் காரணமாக ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா, மணிக்கூண்டு, ஆர்.கே.வி.ரோடு, ஈஸ்வரன் கோவில் வீதி, மேட்டூர் ரோடு போன்ற பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளது. இதனால் மாநகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் சிலர் பொதுமக்களிடம் நகை, பணத்தை கொள்ளை அடிக்க முயற்சிப்பார்கள். இதனை கட்டுப்படுத்தும் வகையில் ஈரோடு மாவட்ட போலீஸ்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

1,100 போலீசார்

அதன்படி ஈரோட்டில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு அதில் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த முறை பொது மக்களின் நடமாட்டத்தை துல்லியமாக கண்காணிக்கும் வகையில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் நின்றவாறு போலீசார் தொலை நோக்கி மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல் கோபி, அந்தியூர், பவானி, மொடக்குறிச்சி, சத்தியமங்கலம், கோபி, பெருந்துறை, சென்னிமலை போன்ற பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின்பேரில் 3 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 8 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 41 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 1,100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்