தமிழக செய்திகள்

மான் சாவு

ஆலங்குளம் அருகே மான் இறந்து கிடந்தது .

தினத்தந்தி

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே ராமர் கோவில் வனப்பகுதி அமைந்துள்ளது. இங்கு மான்கள் மற்றும் காட்டு பன்றிகள் ஏராளமாக உள்ளன. கோடை காலம் என்பதால் மான்கள் காட்டு பகுதியை விட்டு தோட்டங்களுக்கும், பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கும் தண்ணீர் தேடி வருகின்றன. அப்போது சாலையை கடக்கும்போதும், நாய்களால் தாக்கப்பட்டும் ஏராளமான மான்கள் உயிரிழந்து வருகின்றன.

இந்த நிலையில் ஆலங்குளம் அருகே பூலாங்குளம் கிராமத்தின் கீழ்புறம் உள்ள தோட்டம் ஒன்றில் மான் ஒன்று இறந்து கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலர் பொன்ராஜ் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் வந்தனர். அங்கு இறந்து கிடந்த சுமார் 1 வயது மதிக்கத்தக்க பெண் மான் உடலை மீட்டு ஆலங்குளம் ராமர் கோவில் வனப்பகுதிக்கு கொண்டு சென்று புதைத்தனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை