தமிழக செய்திகள்

தெருநாய்கள் கடித்து குதறியதில் மான் பலி

தெருநாய்கள் கடித்து குதறியதில் மான் பலியானது.

தினத்தந்தி

பெரம்பலூர் அருகே பாளையம் கிராமத்தில் செஞ்சேரி ஏரிக்கரை ஓரமாக உள்ள வயலுக்கு நேற்று காலை வந்த ஆண் புள்ளி மான் ஒன்றை தெருநாய்கள் கடித்து குதறின. இதில் உடலின் பின்புறத்தில் பலத்த காயம் ஏற்பட்டதால் அந்த மான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது. இதனை கண்ட அந்த வழியாக சென்ற விவசாயிகள் பெரம்பலூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் இறந்து கிடந்த மானின் உடலை மீட்டனர். பின்னர் கால்நடை மருத்துவரை கொண்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அதன் உடல் வன காப்பு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு புதைக்கப்பட்டது.

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சண்டிகாரில் காலிஸ்தானிய பயங்கரவாதிகள் பெயரில் 26 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்