தமிழக செய்திகள்

கல்லூரி மாணவியிடம் அவதூறு பேச்சு: அரசு பஸ் கண்டக்டர் பணியிடை நீக்கம்

கல்லூரி மாணவியிடம் அவதூறு பேச்சு: அரசு பஸ் கண்டக்டர் பணியிடை நீக்கம்.

தினத்தந்தி

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கலிங்கப்பட்டிக்கு தினசரி காலை 10.40 மணிக்கு அரசு போக்குவரத்து கழக டவுன் பஸ் செல்வது வழக்கம். இந்த பஸ் சரிவர இயக்கப்படாததால் இது பற்றி கொருக்குப்பட்டியை சேர்ந்த சிலர் ஸ்ரீவில்லிபுத்தூர் போக்குவரத்து கழக கிளையில் புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அந்த பஸ் முறையாக இயக்கப்பட்டது. இந்தநிலையில் அந்த பஸ்சில் கொருக்குப்பட்டியை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி பயணம் செய்தார். அப்போது கல்லூரி மாணவியிடம் அந்த பஸ் கண்டக்டர் தங்கவேலு இந்த பஸ் சரியாக இயங்கவில்லை என்று யார் புகார் தெரிவித்தது என கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது கல்லூரி மாணவி நான்தான் புகார் செய்தேன் என்று தெரிவித்ததால் தங்கவேலு கல்லூரி மாணவியிடம் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து விருதுநகர் மண்டல போக்குவரத்துக் கழக பொதுமேலாளர் சிவலிங்கம் இதுகுறித்து விசாரணை நடத்தி கண்டக்டர் தங்கவேலுவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்