தமிழக செய்திகள்

துப்புரவு தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஏ.ஐ.டி.யூ.சி. தேனி மாவட்ட அனைத்து துப்புரவு தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தினத்தந்தி

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஏ.ஐ.டி.யூ.சி. தேனி மாவட்ட அனைத்து துப்புரவு தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆண்டிப்பட்டி பேரூராட்சியில் தூய்மை தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் முறைகேடு நடப்பதாகவும், அதற்கு ஒத்துழைக்காததால் தூய்மை தொழிலாளர்கள் 2 பேரை அன்றாட பணிக்கு அனுப்பாமல் நிறுத்தி வைத்து இருப்பதாகவும் கூறி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் பிச்சைமுத்து தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தின்போது பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், பணி வழங்காமல் நிறுத்தி வைத்துள்ள 2 தொழிலாளர்களுக்கும் பணி வழங்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை