தமிழக செய்திகள்

அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டியில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவில்பட்டி:

தமிழக அரசின் பட்ஜெட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான கோரிக்கைகள் இடம் பெறாததை கண்டித்து கோவில்பட்டி வணிக வரி அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க தாலுகா துணை தலைவர் நவநீத கண்ணன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இணை செயலாளர் உமாதேவி, தாலுகா செயலாளர் பிரான்சிஸ், சாலை பணியாளர் சங்க மாநில செயலாளர் ஹரி பாலகிருஷ்ணன், வணிகவரி பணியாளர் சங்கத்தைச் சேர்ந்த நடராஜன், ரவிசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனா.

இதேபோன்று கோவில்பட்டி நகரசபை அலுவலகம், கூட்டுறவு துணை பதிவாளர் அலுவலகம், கூட்டுறவுத்துறை தணிக்கை அலுவலகம், தாலுகா அலுவலகம், நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம், கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் முன்பும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...