தமிழக செய்திகள்

கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

சங்கராபுரத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தினத்தந்தி

சங்கராபுரம்:

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்து சங்கராபுரம் வட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் தாலுகா அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கினார். தாசில்தார் சரவணன், தலைமையிடத்து துணை தாசில்தார் அனந்தகிருஷ்ணன், தேர்தல் துணை தாசில்தார் பசுபதி, மாவட்ட துணைத்தலைவர் ராஜா, மாவட்ட தலைமை நிலைய செயலாளர் வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் வரதராஜன் கண்டன உரையாற்றினார். இதில் வட்ட பொருளாளர் பர்க்கத்துன்னிஷா, வருவாய் ஆய்வாளர் கல்யாணி, கிராம நிர்வாக அலுவலர்கள் கார்த்தி, தீபா, ஜெயலட்சுமி, சண்முகபிரியா, பாரதி மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்