தமிழக செய்திகள்

டெங்கு பாதித்த கர்ப்பிணிக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

டெங்கு பாதித்த கர்ப்பிணிக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தினத்தந்தி

திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு தினமும் காய்ச்சல் உள்பட பல்வேறு நோய்களுக்கு ஏராளமானோர் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள். இந்தநிலையில் 18 பெரியவர்கள், 17 குழந்தைகள், 7 கர்ப்பிணிகள் என மொத்தம் 42 பேர் சாதாரண காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் ஒரு கர்ப்பிணிக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 2 பேர் மட்டும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், வெளிமாவட்டங்களை சேர்ந்த 10 பேர் திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் டெங்கு பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்