தமிழக செய்திகள்

அபிராமி அம்மனை பல்லக்கில் சுமந்தபடி பக்தர்கள் கிரிவலம்

திண்டுக்கல்லில் அபிராமி அம்மனை பல்லக்கில் சுமந்தபடி பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.

திண்டுக்கல் மலைக்கோட்டையின் உச்சியில் மிகவும் பழமையான பத்மகிரீஸ்வரர்-அபிராமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சாமி சிலைகள் இல்லாததால், 2 நூற்றாண்டுகளுக்கு மேலாக வழிபாடுகள் நடைபெறுவது இல்லை. எனினும் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் பத்மகிரீஸ்வரர்-அபிராமி அம்மனை பக்தர்கள் மனமுருக வேண்டி கொண்டு மலைக்கோட்டையை சுற்றி கிரிவலம் செல்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று புரட்டாசி மாத பவுர்ணமி ஆகும். இதையொட்டி பெண்கள், இளைஞர்கள், இளம்பெண்கள் உள்பட ஏராளமானோர் கிரிவலம் சென்றனர். அப்போது பத்மகிரீஸ்வரர்-அபிராமி அம்மன் சிலைகளை பல்லக்கில் சுமந்தபடி பக்தி பாடல்களை பாடியபடி பக்தர்கள் கிரிவலம் சென்றது குறிப்பிடத்தக்கது. மேலும் கிரிவல பாதையில் உள்ள கோவில்களில் பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்