தமிழக செய்திகள்

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் திரண்ட பக்தர்கள்

ஆடி செவ்வாய்க்கிழமையயொட்டி இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் திரண்டனர்.

சாத்தூர், 

ஆடி செவ்வாய்க்கிழமையயொட்டி இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் திரண்டனர்.

சிறப்பு வழிபாடு

சாத்தூர் அருகே இருக்கன்குடியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் விருதுநகர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த கோவிலில் ஆடி மாதம் நடைபெறும் பூஜையில் வழக்கத்தை காட்டிலும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

இந்தநிலையில் ஆடி செவ்வாய்க்கிழமையான நேற்று மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் விருதுநகர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நேர்த்திக்கடன்

அதேபோல எண்ணற்ற பக்தர்கள் அதிகாலை முதல் கோவிலுக்கு வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் கருணாகரன் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி தலைமையில் அறங்காவலர் குழுவினர் முன்னிலையில் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களிலும் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு