தமிழக செய்திகள்

ஆழியாற்றில் திதி கொடுத்து பக்தர்கள் வழிபாடு

மகாளய அமாவாசையையொட்டி ஆழியாற்றில் திதி கொடுத்து பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

புரட்டாசி மாதம் வரும் அமாவாசை மகாளய அமாவாசையாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் நேற்று மகாளய அமாவாசையையொட்டி சிறப்பு அபிஷேக மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோன்று பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் மகாளய அமாவாசையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் பொள்ளாச்சி அருகே உள்ள அம்பராம்பாளையம் ஆழியாற்றுக்கு கோவை, திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு நடத்தினர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு