தமிழக செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை

பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை

தினத்தந்தி

வால்பாறை

வால்பாறை, முடீஸ், சோலையாறு நகரில் உள்ள சுகாதார நிலையங்கள் சார்பில் உலக குடற்புழு நீக்க தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி குடற்புழு தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் நல்லகாத்து எஸ்டேட் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ரஞ்சித் குமார் தலைமையில் வால்பாறை சுகாதார நிலைய டாக்டர்கள் சாமிநாதன், உதயன் ஆகியோர் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும் பகுதி சுகாதார செவிலியர் தேவகி, கிராம சுகாதார செவிலியர் சசி மற்றும் மக்களை தேடி மருத்துவ திட்ட பணியாளர்கள் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கினார்கள். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து