தமிழக செய்திகள்

செம்மஞ்சேரி காவல்நிலையத்தில் டி.ஜி.பி. சைலேந்திர பாபு திடீர் ஆய்வு - எழுத்தருக்கு ரூ.5,000 வெகுமதி வழங்கி பாராட்டு

பதிவேடுகளை முறையாக பராமறித்த காவல் நிலைய எழுத்தர் ராஜாமணிக்கு டி.ஜி.பி. சைலேந்திர பாபு ரூ.5,000 வெகுமதி வழங்கி பாராட்டினார்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் இன்று தமிழக காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திர பாபு தீடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது காவல் நிலையத்தில் உள்ள சரித்திர பதிவேடுகள், குற்றச்சம்மந்த பதிவேடுகளை அவர் ஆய்வு செய்தார்.

மேலும் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் சமீபத்தில் கைது செய்யப்பட்டவர்களின் விவரங்கள் உள்ளிட்டவை குறித்து காவல் ஆய்வாளர் நடராஜன் மற்றும் எழுத்தர் ராஜாமணியிடம் விசாரித்தார். பின்னர் காவல் நிலையத்தில் உள்ள உதவி ஆய்வாளர்கள், காவலர்களிடம் நிறை குறைகளை கேட்டறிந்தார்.

இதனையடுத்து காவல் நிலையத்தில் பதிவேடு அனைத்தும் முறையாக பின்பற்றப்பட்டு இருந்ததால் காவல் நிலைய எழுத்தர் ராஜாமணிக்கு ரூபாய் 5,000 வெகுமதி வழங்கினார். பின்னர் அனைவருடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த ஆய்வின் போது பள்ளிக்கரணை துணை ஆணையர் ஜோஷ் தங்கையா, செம்மஞ்சேரி சரக உதவி ஆணையாளர் ரியாசுதீன் ஆகியோர் உடன் இருந்தனர்.

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்