தமிழக செய்திகள்

குற்றவாளியை பிடித்த போலீசாருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டு

திருட்டு நடந்த 6 மணி நேரத்தில் குற்றவாளியை பிடித்த போலீசாருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

தினத்தந்தி

வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த நெக்குந்தி டோல்கேட் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மினி லாரியை ரூ.29 லட்சம் மதிப்புள்ள எலக்ட்ரானிக் பொருள்களுடன் கடத்திச் சென்ற நபரை, வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன், இன்ஸ்பெக்டர் நாகராஜன் உள்ளிட்ட தனிப்படை போலீசார் சம்பவம் நடந்த 6 மணி நேரத்துக்குள் கைது செய்து, மினிலாரியுடன் பொருட்களை மீட்டனர்.

இந்த நிலையில் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வாணியம்பாடிக்கு வந்து, 6 மணிநேரத்தில் குற்றவாளியை கைது செய்த வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன், இன்ஸ்பெக்டர் நாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் உள்ளிட்டவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா, திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உடனிருந்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு