தமிழக செய்திகள்

தர்மபுரி: நடைபயிற்சியின்போது வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது.

தர்மபுரி,

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். முன்னதாக அவர் இன்று காலை பாலக்கோடு பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது, அவர் பாலக்கோடு திமுக வேட்பாளர் செந்தில் குமாரை ஆதரித்து பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.