தமிழக செய்திகள்

ஓசூரில்சிமெண்டு குழாயில் தலை மோதி 1½ வயது குழந்தை பலி

தினத்தந்தி

ஓசூர்:

ஓசூரில் சிமெண்டு குழாயில் தலை மோதி 1 வயது குழந்தை பலியானது.

1 வயது குழந்தை

உத்தரபிரதேச மாநிலம் மிர்ஜாபுரி மாவட்டம் சிப்புரியை சேர்ந்தவர் தினேஷ். இவருடைய மனைவி சாந்தா (வயது 48). இவர்களுக்கு 1 வயதில் ராவிணி என்ற ஆண் குழந்தை இருந்தது. தினேஷ் தனது மனைவி, மகனுடன் ஓசூரில் உள்ள மத்தம் அக்ரஹாரம் பகுதியில் தங்கி வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் குழந்தை ராவிணி நேற்று முன்தினம் அப்பகுதியில் விளையாடி கொண்டிருந்தது. அப்போது தினேஷ் மற்றும் சாந்தா ஆகியோர் சிமெண்டு குழாயை கழற்றி நகர்த்தி கொண்டிருந்தனர்.

பலி

அப்போது குழந்தை ராவிணி சிமெண்டு குழாயின் குறுக்கே சென்றதாக கூறப்படுகிறது. அந்தசமயம் சிமெண்டு குழாயில் குழந்தையின் தலை மோதியதாக தெரிகிறது. இதில் பலத்த காயம் அடைந்த குழந்தையை பெற்றோர் மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குழந்தை ராவிணி நேற்று முன்தினம் இறந்தது. இதுகுறித்து சாந்தா கொடுத்த புகாரின்பேரில் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை