தமிழக செய்திகள்

காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தனியார் நிறுவன ஊழியரின் உடல் சோழசிராமணியில் மீட்பு நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்

காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நெல்லை மாவட்டத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரின் உடல் சோழசிராமணியில் மீட்கப்பட்டது.

தினத்தந்தி

பரமத்திவேலூர்:

காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நெல்லை மாவட்டத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரின் உடல் சோழசிராமணியில் மீட்கப்பட்டது.

வாலிபர் உடல்

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா சோழசிராமணி கதவணையின் 2-வது மதகு பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபரின் உடல் கிடப்பதாக ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் இறந்து கிடந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து போலீசாரின் விசாரணையில் பிணமாக கிடந்தவர் நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் நகராட்சி முப்பிடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த லட்சுமி நாராயணன் மகன் பரசுராமன் (வயது 30) என்பது தெரியவந்தது.

விசாரணை

இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. பரசுராமன் நேற்று முன்தினம் மொடக்குறிச்சி நட்டாத்தீஸ்வரர் கோவிலுக்கு சென்றார். பின்னர் அங்குள்ள காவிரி ஆற்றில் குளித்தபோது அடித்து செல்லப்பட்டது நீரில் மூழ்கி இறந்து உடல் சோழசிராமணி கதவணையில் ஒதுங்கியது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்டு நீரில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு