தமிழக செய்திகள்

தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி முட்டை நிறுவன ஊழியர் பலி

தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி முட்டை நிறுவன ஊழியர் பலி

தினத்தந்தி

நாமக்கல்லில் தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி முட்டை நிறுவன ஊழியர் பலியானார்.

முட்டை நிறுவன ஊழியர்

நாமக்கல் சந்தைப்பேட்டை புதூரை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவருடைய மகன் சங்கர் (வயது 29). இவர் தனியார் முட்டை நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

இவர் நேற்று அதிகாலை 3 மணி அளவில் நாமக்கல்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

விசாரணை

அப்போது செல்லப்பம்பட்டி மேம்பாலம் அருகே சென்றபோது நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலையோர தடுப்பு சுவர் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு