தமிழக செய்திகள்

பரமத்தி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை

தினத்தந்தி

பரமத்திவேலூர்:

பரமத்தி அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

விவசாயி

பரமத்தி அருகே உள்ள கரட்டுப்பாளையம் இச்சிக்காடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 58) விவசாயி. இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதனால் மனமடைந்த நிலையில் இருந்து வந்த சுப்பிரமணி நேற்று அதிகாலை வீட்டில் இருந்த விஷத்தை குடித்து உயிருக்கு போராடினார். இதை பார்த்த அவரது குடும்பத்தினர் சுப்பிரமணியை மீட்டு கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

விசாரணை

பின்னர் மேல் சிகிச்சைக்காக கரூரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி இறந்தார். இதுகுறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்