தமிழக செய்திகள்

கோட்டப்பட்டி அருகேவிளக்கு ஏற்றியபோது தீக்காயமடைந்த சிறுமி சாவு

தினத்தந்தி

அரூர்:

தர்மபுரி மாவட்டம் கோட்டப்பட்டி அருகே உள்ள பையர்நாயக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதம்பி, தொழிலாளி. இவருடைய மகள் மோனிகா (வயது 10). மோனிகா கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வீட்டில் விளக்கு ஏற்றிய போது உடையில் எதிர்பாராத விதமாக தீப்பற்றி காயமடைந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர். அங்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் சிறுமி மோனிகாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மோனிகா உயிரிழந்தார். இது தொடர்பாக கோட்டப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்