தமிழக செய்திகள்

தேன்கனிக்கோட்டையில்மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பலி

தினத்தந்தி

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டையில் மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பலியானான்.

பள்ளி மாணவன்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா அரசகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மகன் சந்தன்குமார் (வயது 15). இவன் தேன்கனிக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று மாணவர் வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்கு செல்லும் மின்சார ஒயர் அறுந்து மரத்தின் மீது உரசி கொண்டிருந்தது. இதனால் அதில் கட்டப்பட்டிருந்த துணியை காயப்போடும் கம்பியில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது.

பலி

அப்போது எதிர்பாராதவிதமாக சந்தன்குமார் துணி காயப்போடும் கம்பியை பிடித்தான். இதனால் அவன் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தான். அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு மாணவனை பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலேயே மாணவன் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்த ஏற்படுத்தி உள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்