தமிழக செய்திகள்

திண்டுக்கல்: காவலர் குடியிருப்பில் திடீரென பற்றி எரிந்த தீ.. தீயில் கருகிய இருசக்கர வாகனங்கள்

இந்த தீ விபத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

தினத்தந்தி

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு காவலர் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த வத்தலக்குண்டு தீயனைப்புப்படையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கையால் சுமார் 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் தப்பின.

இருசக்கர வாகனங்களில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளதால், பெதுமக்கள் கடும் அவதியடைந்தனர். இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.  

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்