தமிழக செய்திகள்

டிப்ளமோ, பி.எஸ்சி. முடித்தவர்கள் 2-ம் ஆண்டு என்ஜினீயரிங் படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

டிப்ளமோ, பி.எஸ்சி. முடித்தவர்கள் 2-ம் ஆண்டு என்ஜினீயரிங் படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு.

தினத்தந்தி

சென்னை,

டிப்ளமோ, பி.எஸ்சி. பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நேரடியாக 2-ம் ஆண்டு என்ஜினீயரிங் படிப்பில் தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், அண்ணா பல்கலைக்கழக துறை மற்றும் உறுப்புக்கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம், சுயநிதி கல்லூரிகளில் 2022-23-ம் கல்வியாண்டில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம்.

www.tnlea.com, www.accet.co.in, www.accetedu.in என்ற இணையதளங்களில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். சான்றிதழ்களையும் அதே இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அடுத்த மாதம் (ஜூலை) 23-ந்தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

2-ம் ஆண்டு பி.இ., பி.டெக். பட்டப்படிப்பு கலந்தாய்வு இணையதளத்தின் வாயிலாகவே இந்த கல்வியாண்டில் நடைபெறும். மேலும் இதுதொடர்பான தகவல்களுக்கு 04565-230801, 04565-224528 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

மேற்கண்ட தகவல் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்