தமிழக செய்திகள்

மேலும் 10 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்

மேலும் 10 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இன்று முதல் பயன்பாட்டிற்கு வருகிறது.

தினத்தந்தி

அரியலூர் மாவட்டத்தில் கரீப் கே.எம்.எஸ். 2022-2023 சம்பா பருவத்தில் சாகுபடி செய்துள்ள நெல்லினை கொள்முதல் செய்வதற்கு 5-ம் கட்டமாக அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டத்தில் வடுகபாளையம், கோவில் எசனை, வெங்கனூர், சுள்ளங்குடி, பளிங்காநத்தம், நானாங்கூர், விளாகம், ஒரியூர், காமரசவள்ளி, பாளையப்படி ஆகிய 10 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட கிராமங்களில் இன்று (புதன்கிழமை) முதல் பயன்பாட்டிற்கு வர உள்ளதால், அருகில் உள்ள விவசாய பெருமக்கள், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பயன்படுத்தி பயன்பெறலாம், என்று கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு