தமிழக செய்திகள்

முல்லைப்பெரியாற்றில் பேரிடர் மீட்பு ஒத்திகை

போடி தீயணைப்பு துறை சார்பில் உப்புக்கோட்டை-உப்பார்பட்டி இடையே செல்லும் முல்லைப்பெரியாற்றில் பேரிடர் மீட்பு பணி ஒத்திகை நேற்று நடைபெற்றது.

தினத்தந்தி

போடி தீயணைப்பு துறை சார்பில் உப்புக்கோட்டை-உப்பார்பட்டி இடையே செல்லும் முல்லைப்பெரியாற்றில் பேரிடர் மீட்பு பணி ஒத்திகை நேற்று நடைபெற்றது. இதில் ஆறுகளில் வெள்ளம், பேரிடர் காலங்களில் எவ்வாறு மக்களை காப்பது, நீச்சல் தெரியாதவர்களை எப்படி காப்பாற்றுவது, என்பது குறித்து பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுக்கு தீயணைப்பு வீரர்கள் செயல்விளக்கம் செய்து காண்பித்தனர்.

அப்போது வாழைமரம், லைப் ஜாக்கெட், டியூப், காலி பாட்டில்கள், காலி குடம், காலி சிலிண்டர், பிளாஸ்டிக் பந்து போன்றவற்றை பயன்படுத்தி திடீரென ஏற்படும் வெள்ள பெருக்கில் பொதுமக்களை எவ்வாறு பாதுகாப்பது என்று மாணவர்கள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் குளம், கண்மாய்களில் மழைநீரை சேமித்து வைப்பது குறித்தும் பேசினர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை