தமிழக செய்திகள்

சொத்து வரி செலுத்தாத 13 வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

திண்டுக்கல் மாநகராட்சியில் சொத்து வரி செலுத்தாத 13 வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

தினத்தந்தி

திண்டுக்கல் மாநகராட்சியின் வருமானத்தை பெருக்கும் வகையில், நிலுவையில் உள்ள வரியை வசூல் செய்வதற்கு அதிகாரிகளை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர், வார்டு வாரியாக சென்று வரி வசூலில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது வரி செலுத்தாமல் நீண்டநாள் நிலுவையில் வைத்துள்ள நபர்களுக்கு நோட்டீஸ் வழங்குகின்றனர். அதன்பின்னரும் பலர் வரி செலுத்தாமல் உள்ளனர்.

எனவே சொத்துவரி, குடிநீர் வரி செலுத்தாத நபர்களின் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பை துண்டிக்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். அதன்படி நேற்று முன்தினம் 15 வீடுகளின் குடிநீர் இணைப்பை துண்டித்தனர். இதைத்தொடர்ந்து நேற்று ரவுண்டுரோடு புதூர், நாகல்புதூர், சாமியார்தோட்டம், ஆர்.எம்.காலனி உள்ளிட்ட பகுதிகளில் சொத்து வரி, குடிநீர் வரி செலுத்தாத 13 வீடுகளின் குடிநீர் இணைப்பை அதிகாரிகள் துண்டித்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து