தமிழக செய்திகள்

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: ஆக., 24ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சி.விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.

புதுக்கோட்டை,

புதுக்​கோட்டை மாவட்​டம் விராலிமலை சட்​டமன்ற தொகு​தி​யில் வெற்றி பெற்ற முன்​னாள் அமைச்​சர் சி.​விஜய​பாஸ்​கர், 2016-ல் இருந்து 2021 வரை அமைச்​ச​ராக இருந்த காலக்​கட்​டத்​தில் தனது மனைவி ரம்யா பெயரிலும், தனது பெயரிலும் வரு​மானத்​துக்கு அதி​க​மாக சொத்து சேர்த்​த​தாக, புதுக்​கோட்டை மாவட்ட ஊழல் தடுப்பு மற்​றும் கண்​காணிப்பு பிரிவு போலீ​சார் கடந்த 2021-ல் வழக்​குப் பதிவு செய்​தனர்.

மறு​நாள் விஜய​பாஸ்​கருக்கு சொந்​த​மான வீடு, கல்​கு​வாரி, அலு​வல​கம் உள்பட தமிழகம் முழு​வதும் 56 இடங்​களில் ஊழல் தடுப்பு போலீ​சார் சோதனை நடத்​தினர். இந்த வழக்கு புதுக்​கோட்டை மாவட்ட முதன்மை நீதி​மன்​றத்​தில் விசா​ரிக்​கப்​பட்டு வந்​தது. வழக்கு விசா​ரணை​யின்​போது, விஜய​பாஸ்​கர், ரம்யா ஆகியோர் அவ்​வப்​போது நீதி​மன்​றத்​தில் ஆஜராகி வந்​தனர்.

இதன்படி சி.விஜயபாஸ்கர் மற்றும் அவர் மனைவி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்துவரும் நிலையில், இன்றைக்கு வழக்கு விசாரணையில் இருவரும் ஆஜராகவில்லை. இதனை அடுத்து வழக்கு விசாரணை அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

SCROLL FOR NEXT